search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புதுமண தம்பதி மரணம்"

    திருமணம் முடிந்து ஆறு நாட்களே ஆன நிலையில் புதுமண தம்பதிகள் விபத்தில் இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    கிருஷ்ணகிரி:

    வேலூர் மாவட்டம் வாணியம்பாடி ஆமினாபாத் பகுதியை சேர்ந்தவர் ஹம்மாத். இவருக்கு கடந்த சனிக்கிழமை ஆம்பூரில் திருமணம் நடந்தது.

    இந்த நிலையில் இவர் மனைவியுடன் பெங்களூரில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றுவிட்டு, நேற்று நள்ளிரவு காரில் ஊருக்கு திரும்பி வந்துகொண்டு இருந்தனர்.

    அப்போது அவர்கள் வந்து கொண்டிருந்த கார் எமக்கல்னத்தம் என்ற இடத்தில் வந்தபொது ஓட்டுனர் ஹம்மாத்தின் கட்டுப்பாட்டை இழந்து அருகில் உள்ள தடுப்புவேலி மீது மோதி சென்னை-பெங்களூர் சாலைக்கு சென்றது. அப்போது சென்னையில் இருந்து கிருஷ்ணகிரி நோக்கி வந்த கண்டெய்னர் லாரி கார் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் ஹம்மத் மற்றும் அவரது மனைவி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

    இச்சம்பவம் குறித்து பருகூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    திருமணம் முடிந்து ஆறு நாட்களே ஆன நிலையில் புதுமண தம்பதிகள் இறந்த இச்சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    ×